tamilnadu

img

சப்பாத்திக்கு உப்பு வழங்கப்பட்ட சம்பவத்தை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் மீது வழக்குப்பதிவு!

உத்தரப் பிரதேசத்தில், மதிய உணவாக சப்பாத்திக்கு உப்பை தொட்டு சாப்பிட்ட அரசு பள்ளி மாணவர்களை படம்பிடித்த பத்திரிக்கையாளர் மற்றும் கிராம அதிகாரி மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சியூரி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவாக தினமும் ஒரு சப்பாத்தியும், அதற்கு தொட்டுக்கொள்ள உப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை  நடத்தப்பட்டு, பின்னர் ஆசிரியர் மற்றும் மதிய உணவு வழங்கும் நிர்வாகி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது.

இந்த நிலையில்,  மதிய உணவாக சப்பாத்திக்கு உப்பை தொட்டு சாப்பிட்ட அரசு பள்ளி மாணவர்களை படம்பிடித்த பத்திரிக்கையாளர் பவான் ஜெஷ்வால் மற்றும் கிராம அதிகாரி ஆகியோர் பொய்யான தகவல்களை பரப்பியதாகவும், உ.பி அரசின் பெயருக்கு களங்கம் விளைவித்ததாகவும் கூறி, அவர்கள் மீது 120பி, 186, 193 மற்றும் 420 ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.